2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 2)
வாழ்க்கையை ரசித்து அனுபவிக்காதவர்களிடம் வழிகாட்டுதலைத் தேடாதீர்கள்.
தோல்வியடைந்தவர்களை பின்பற்றினால் உங்களால் வெற்றியாளனாக வாழ முடியாது.
வாழ்க்கையில் வெற்றி பெற்ற ஒருவரை நீங்கள் பின்பற்றாவிட்டால் வெற்றியை அனுபவிக்க முடியாது.
அப்போஸ்தலனாகிய பவுல், "நான் கிறிஸ்து இயேசுவைப் பின்பற்றுவது போல நீங்களும் என்னைப் பின்பற்றுகிறீர்கள்" என்று கூறினார்.
எபிரேயர் புத்தகத்தில், கர்த்தருடைய ஆவியானவர் கூறுகிறார், "வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களுமாயிருங்கள்." (எபிரெயர் 6:12)
விசுவாச மார்க்கத்தில் நடக்காத ஒருவரைப் பின்தொடராதீர்கள், ஏனென்றால் பயத்தில் வாழும் ஒருவரை நீங்கள் பின்பற்றினால், அவர் விழுந்த அதே குழியில் நீங்கள் விழுவீர்கள்.
எனவே பயப்படுபவர்களைப் பின்பற்றாதீர்கள்; விசுவாசத்தால் வாழும் ஒருவரைப் பின்பற்றுங்கள், அப்போதுதான் நீங்கள் விசுவாசத்தைக் கற்றுக்கொள்ள முடியும்.
விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்துகிறது; விசுவாசமானது உங்களுக்கு சூழ்நிலைகளை சமாளிக்க உதவுகிறது. (எபிரெயர் 11:6)
விசுவாசம் என்பது எப்போதும் முன்னோக்கி ஏகும் ஒரு சக்தியாகும். ஆனால் பயம் முன்னோக்கி ஏகுவதில்லை; அது எப்போதும் பின்னோக்கியே செல்லும்.
தேவன் எப்போதும் "செல்" என்று கூறுவதை வேதத்தில் காணக்கூடியதாக இருக்கிறது.
பின்னோக்கி வராதே என்கிறார்.
உலகமெங்கும் சென்று சகல ஜாதியினரையும் சீஷராக்குங்கள். (மாற்கு 16:15)
தேவனுக்குத் தேவை வெறுமனே மதம் மாறுவது அல்ல; அவருடைய தேவையெல்லாம் சீஷர்களே. ஏனென்றால் ஒரு நபர் மதம் மாற்றம் அடைந்தால், அவர் முன்பு நம்பிய மதத்திற்கு எப்போதும் திரும்ப முடியும்.
ஆனால் நீங்கள் ஒரு சீஷராக இருந்தால், கர்த்தராகிய இயேசுவைப் பின்பற்றுவதற்கு நீங்கள் நாணயமானவராக இருப்பீர்கள்.
அதனால்தான் இயேசு சொன்னார், “போய் சீஷராக்குங்கள்” என்று.
BELIEVERS’ FELLOWSHIP
_______________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#848)]