Print this page

நீங்கள் நினைத்துப் பார்ப்பதற்கும் அதிகமாக உங்கள் வெற்றி மற்றும் நல்வாழ்வின் மீது  கர்த்தர் ஆர்வம் காட்டுகிறவராக இருக்கிறார்! (பகுதி 1)

1_E.png

நாம் செழிப்பாகவும் வெற்றிகரமாகவும் வாழ்வது  என்பது மெய்யாகவே அது கர்த்தரால் கொடுக்கப்படும் ஒரு கொடையாக இருக்கிறது.

ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு,  யோசேப்பு, தாவீது மற்றும் பலருக்கு அவர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் செழிப்புடனும், செழுமையுடனும் வாழ கர்த்தர் எவ்வாறு ஆசீர்வதித்து கிருபை அளித்தார் என்பதை நாம் வேதத்தில் காண்கிறோம்.

அவ்வாறே, நம்முடைய கர்த்தராகிய இயேசுவின் அபரிமிதமான கிருபையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார், அவருடைய தரித்திரத்தின் மூலம் நீங்கள் ஐசுவரியவான்களாக மாறலாம்.

இதே வசனத்தில், உங்களுக்காகவே அவர் தனது ஐசுவரியத்தைத் துறந்து தரித்திரரானார் என்று கூறப்படுகிறது.

அவர் உங்களுக்காகச் சேமித்து வைத்திருக்கும் சகலவற்றையும் அனுபவிக்கும்படிக்கு உங்களுக்கு உதவுவதே தேவனின் சித்தமாயிருக்கிறது.

சங்கீதம் 84:11 கூறுகிறது, உத்தமத்தோடு அவருடைய பாதையில் நடப்பவர்களுக்குத் தேவையானதில் ஒன்றும் குறைவுபடாது, ஏனென்றால் அவர் அனைத்தையும் வழங்குகிறவராக இருக்கிறார்!

 ஆம்,  நீங்கள் சகலவற்றையும் எல்லா வகையிலும் ஒவ்வொரு கணமும் போதுமானதை விட அதிகமாகப் பெறும்படிக்கு தேவன் தாமே சகல வகையான அருளாலும் உங்களை நிரப்பத் தயாராக இருக்கிறார், அதனால்—நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியத்திலும் அவர் உங்களை மிகுதியாகப் பெருகச் செய்வார்.

நாம்  தேட வேண்டியது செல்வத்தையல்ல, செல்வத்தைப் பெறுவதற்கான ஆற்றலையும் திறனையும் தரும்  தேவனைத் தேட வேண்டும் என்பதை நாம் நினைவில் கொள்வது மிகவும் முக்கியம்.

"எனது சொந்த பலத்தாலும் திறமையாலும் எனக்கு இந்த செழிப்பை உண்டாக்கினேன்" என்று  மேன்மைப் பாராட்டிக் கொள்ளாதிருக்கும்படிக்கு ஜாக்கிரதையாக இருங்கள்.

 தேவன் தாமே தம் அடியாரின் செழிப்பில் மிகுந்த மகிழ்ச்சியும் பிரியமும் அடைகிறார் என வேதம் கூறுகிறது - சங்கீதம் 35:27.

இன்று நீங்களும் நானும் அவருடைய பிள்ளைகளாக இருப்பதுடன், அவர் நம்முடைய பரலோகத் தந்தையாக இருக்கிறார்.

ஆதலால் நமது ஆத்துமா செழிப்பாக இருப்பது போல நாமும் செழித்து, தொடர்ந்து நல்ல சுகமாக இருப்பதே அவருடைய சித்தமாயிருக்கிறது.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#21)]

Read 210 times