Print this page

வாழ்க்கையில் ஒரு திடமான பாத்திரமாவது எப்படி? (பகுதி 2)

1_E.png

நாம்  அதைக் கேட்டவுடனே......கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் கேட்கும்போது உங்களுக்கு விசுவாசம்  வருகிறது என்பதை அறிவீர்களா? உங்கள் இதயங்கள் கரைந்து போகும் போது, நீங்கள் இரட்சிக்கப்படுவீர்கள் அல்லது கடினப்படுவீர்கள்.

நீங்கள் விசுவாசியாகவோ, பின்வாங்கிப் போனவராகவோ அல்லது நீங்கள் ஒருபோதும் தேவனை விசுவாசியாதவராகவோ இருந்தாலும் சரி, நீங்கள் தேவனின் மகத்துவமான செயல்களைப் பற்றி கேள்விப்படுகையில், “தேவரீர், நீரே பரலோகத்திற்கும் பூமிக்கும் தேவன். நான் என் செயல்களுக்காக வருந்துகிறேன் அல்லது என் இதயத்தை கடினப்படுத்தப் போகிறேன்.” என்று கூற முற்படுவீர்கள்.

          

இவ்வாறான ஒரு காரியத்தைத் தான் நானும் இப்பெண்ணிடம் கண்டேன். “எங்களில் யாருக்கும் தைரியம் இல்லை” என்று அவள் கூறினாள்.

உங்களுடைய தேவனின் மகத்துவத்தைக் கேள்விப்படும்போது, ​​ மனித தைரியம் அற்றுப்போகும். இதயம் கரைந்து போகும். அப்பொழுது “தேவரீர், நீர் எவ்வளவு வலிமை மிக்க தேவனாக இருக்கிறீர்!” என கூறத் தொடங்குவீர்கள்.

         

விபச்சாரியான ராகாபைத் தவிர, மற்றவர்கள் அனைவரும் தங்கள் இருதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.

இப்பொழுது, ராகாப்பை பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம், எவ்வளவு தாழ்த்தப்பட்டவர்களாக இருந்தாலும் தேவனால் அவர்களை உயர்த்த முடியும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஒரு விபச்சாரி எனும்போது அவள் எதற்கும் ஆயத்தமாக இருக்கும் பெண்ணாகவே காண்கிறோம். எதுவும் நடக்கலாம்; அதாவது சூழ்நிலைகளின் தயவிலேயே வாழ நேரிடும்.

 அவள் உடலை விற்கிறவளாக இருந்தாள். ஆனால் இஸ்ரவேலின் தேவனைப் பற்றிக் கேள்விப்பட்டவுடன் அவள் மனந்திரும்புகிறாள்.

            

“நீங்கள் சேவிக்கும் தேவன் வானத்திற்கும் பூமிக்குமான தேவன் என்பதை நான் அறிவேன்” என்றாள்.

அவள் தேவனால் செய்யப்பட்ட சகல காரியங்களைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பித்தாள்.

அவள் இதயம் உருகி, அவள் மாறினாள்; "கர்த்தாவே நான் இஸ்ரவேலின் தேவனை விசுவாசிக்கிறேன்" என்று கூறும் நிலைக்கு வந்தாள்.

            

வருகிற வருஷத்தில் நீங்கள் இவ்விதமான  சவால்களுக்கு முகம் கொடுக்க நேரலாம்.

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

https://www.believersfellowship.lk 
https://youtube.com/c/BelieversFellowshipLK
https://www.facebook.com/BelieversFellowshipLk/
ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp:

https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#31)]

Read 93 times