2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 6)
1 தீமோத்தேயு 6:17 இல், "ஐசுவரியவான்களுக்குக் கட்டளையிடும்படிக்கு அல்லது பணக்காரர்களுக்குக் கற்பிக்கும்படிக்கு" கூறப்படுகிறது.
"கட்டளையிடு" என்ற பதத்திற்கு "கற்பித்தல்" என்றும் பொருள்.
பணக்காரர்களுக்குக் இறுமாப்பு கொண்டவர்களாக இருக்காதபடிக்கு கற்பி.
பெருமிதம் கொள்ளாதே.
என் பெலத்தால், என் வலிமையால்தான் எனக்கு இந்த ஐசுவரியம் கிடைத்தது என்று சொல்லாதே.
ஆனால், ஐசுவரியத்தைப் பெறுவதற்கான திறனை உங்களுக்குத் தந்தருளுகிற உங்கள் தேவனாகிய கர்த்தரை நினைவு கூறுங்கள்.
இது உபாகமம், 8;17 - 18 இல் "உங்கள் தேவனாகிய கர்த்தரை நினைவுகூருங்கள்; அவர்தான் உங்களுக்கு ஐசுவரியத்தைப் பெறுவதற்கான ஆற்றலைத் தருகிறார்."
எனவே, பெருமையான சிந்தை வேண்டாம்!
அடுத்த விஷயம் என்னவென்றால், "நிலையற்ற ஐசுவரியத்தின் மீது நம்பிக்கை வைக்காமல், தேவன் மீது விசுவாசத்தை வைப்பதாகும்."
செல்வம் ஒரு வளம் மட்டுமே, ஆனால் ஜீவிக்கிற தேவன் அனைத்து ஐசுவரியங்களினதும் அனைத்து உயிர்களினதும் மூலாதாரமாக இருக்கிறார்.
நாங்கள் மூலதாரத்தையே விசுவாசிக்கிறோம்!
இந்த உண்மைகளை நீங்களே கற்றுக் கொண்டீர்கள் என்றால், இந்த வருடத்தை உங்கள் வாழ்க்கையில் எந்த பயமும் இல்லாமல் எதிர்கொள்ள முடியும்.
"நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்று நீங்கள் கூறலாம்.
நிலையற்ற ஐசுவரியத்தின் மீது நம்பிக்கையை வையேன். நான் ஜீவிக்கிற தேவன் மீதே விசுவாசத்தை வைக்கிறேன்!
அவர் மரித்துப் போன தேவன் அல்ல; அவர் ஜீவிக்கிற தேவன்!
அவர் குறுகிய காலத்திற்குள் இல்லாமற் போகும் தேவனல்ல, அவர் என்றென்றும் ஜீவிக்கிற தேவனாக இருக்கிறார்.
விசுவாசிகளின் ஐக்கியம்
_____________________
►https://www.believersfellowship.lk
►https://youtube.com/c/BelieversFellowshipLK
►https://www.facebook.com/BelieversFellowshipLk/
►ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195
நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி வேதாகம பாடங்களை" பெற விரும்பினால்,
Follow the Believers Fellowship English channel on WhatsApp:
https://whatsapp.com/channel/0029VaAGZnZF1YlW4KdgSi1u
மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச் சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.
[#855)]