+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

பிசாசு சகல சந்தர்ப்பத்திலும் பயத்தின் மூலக்காரனாவான்.

நீங்கள் பயப்படும்போதெல்லாம், பிசாசுக்கு இடம் கொடுக்கிறீர்கள்.

 “பிசாசுக்கு இடம் கொடுக்காதீர்கள்.” என வேதாகமம் கட்டளையிடுகிறது,

மனுஷனுக்குப் பயப்பட வேண்டாம்.

வேதாகமத்திலுள்ள 2 திமோத்தேயு 1; 7 இல் கூறுகிறதாவது, “தேவன்  நமக்கு பயமுள்ள  ஆவியைக் கொடாமல்; அன்பும் பெலனும் தெளிந்த புத்தியையும் தருகிறார்."

இந்த வசனத்திலிருந்து  தேவன் பயத்தின் முதலானவர் அல்ல, அவரில் எவ்வளவேனும் பயம் இல்லை என்பதை நாம் காண்கிறோம்.

இந்த முழு பிரபஞ்சத்தையும் சிருஷ்டித்த  தேவன் உங்களிடம் இவ்வாறு கூறுகிறார்: ‘ஜெபத்தின் மூலம் என்னை  நோக்கிக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்கு பதிலளிப்பேன். நீங்கள் இன்னும் அறியாத பெரிய மற்றும் வலிமையான விஷயங்களை நான் உங்களுக்குக் காட்டுவேன். எரேமியா 33:3

உங்கள் மனதில் இருக்கும் கேள்விகளுக்கு பதில் தேவையா? உங்களுக்கு தேவையான அனைத்து பதில்களும் என்னிடம் உள்ளன என தேவன் கூறுகிறார். நீங்கள் அவரை அழைக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.