+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்!
(பகுதி 7)

1_E.png

எபிரேயர் 11 ; 6, "விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்.”

விசுவாசம் தேவனைப் பிரியப்படுத்துகிறது!

 

மேலும், தேவனிடம் வருபவர்கள் "அவர் உண்டு!" (அவரது இருப்பை) என்பதை விசுவாசிக்க வேண்டும் என்று அங்கு கூறப்படுகிறது.

அவர் "வருங்காலத்தில் இருக்கப் போகிற...." அல்லது "அவர் இருந்த" தேவன் அல்ல. 

அவர் இருக்கிறார்; அவர் மெய்யாகவே ஜீவனுள்ளவராக இருக்கிறார்; அவர் இப்போதும் இருக்கிறவரான தேவன்!

எனவே, நான் எதை நம்ப வேண்டும்? அவர் இப்போதும் இருக்கிறார், என்பதை நம்ப வேண்டும்.

சர்வவல்லமையுள்ள நம்முடைய கர்த்தராகிய தேவனின்  பெயர்களில் ஒன்று "யெகோவா ஷம்மா".

மேலும் "யெகோவா ஷம்மா" என்ற வார்த்தையின் அர்த்தம் "நிகழ்காலத்தில் இருக்கிற தேவன்" என்பதாகும்.

"அவர் தற்போது இருக்கும் தேவன்" அவர் மரித்த தேவன் அல்ல, அவர் ஜீவிக்கிற தேவன்.

விசுவாசம்

விசுவாசத்தின் ஒரு பதார்த்தம் என்னவென்றால், தேவன் இப்போதும் இருக்கிறார் என்பதை நான் விசுவாசிப்பதாகும்.

"அவர் இருக்கிறார்" என்பதை நான் விசுவாசிக்கிறேன்.

நான் பிரச்சனைகள் மீது நம்பிக்கை வைக்கிறேனா, அல்லது "அவரின் இருப்பின் மீது" நம்பிக்கை வைக்கிறேனா?

தற்போது நிலவும் உலகப் பொருளாதாரத்தின் மீது நம்பிக்கை வைக்கிறேனா, அல்லது "அவர் இப்போதும் இருக்கிறார்?" என்பதன் மீது நம்பிக்கை வைக்கின்றேனா?

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

► www.believersfellowship.lk

https://youtube.com/c/BelieversFellowshipLK

https://www.facebook.com/BelieversFellowshipLk/

►  ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp: 

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#856)]

Read 61 times