+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

2024, பாரிய மனந்திரும்புதலினதும் மறுசீரமைப்பினதும் வருஷம்! (பகுதி 8)

1_E.png

வாழ்க்கையில் நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும், "அவர் இருக்கிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன்" என்று நீங்கள் எப்போதும் சொல்ல வேண்டும்.

அவர் மெய்யாகவே உயிருடன் இருக்கிறார். அவர் இப்போது என்னுடன் இருக்கிறார்.

மேலும் அவர் செய்பலன் அளிப்பவர். அவரை விடாமுயற்சியுடன் தேடுபவர்களுக்கு அவர் பலன் அளிப்பவர்.

அதுவே விசுவாசம், அது மிகவும் எளிமையானது; 

அவர் இருக்கிறார், அவரை வாஞ்சையுடன் தேடுபவர்களுக்கு அவர் பலன் அளிப்பவர்.

எனவே, எனக்கு விசுவாசம் இருந்தால், நான் ஜீவிக்கிற தேவன் மீது விசுவாசம் வைத்து, விசுவாசத்தின்படி நடப்பேனேயாகில், எனக்கு பலன் கிடைக்கும். அது பலன்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் ஜீவியமாகும்.

ஆனால் பயத்தில் நடப்பீர்களானால் அது உங்களது வாழ்க்கையை அழிக்கிறது; அது உங்கள் நம்பிக்கையைப் பறிக்கிறது, உங்கள் நிச்சயத்தைப் பறிக்கிறது, நீங்கள் பயத்துடன் நடக்கத் தொடங்குவீர்கள்.

"காரியங்கள் படு மோசமான நிலைக்குத் தள்ளப்படுமோ எனப் பயமா? ஆனால் "தேவன் இருக்கிறார்."

நிலைமைகள் மோசமடைந்துக் கொண்டு வரலாம். ஆனால் அவர் இன்னும் ஒரே விதமாகவே இருக்கிறார்—நேற்றும், இன்றும் என்றும் ஒரே விதமானவர். 

என்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள் மாறலாம்.

உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் மாற்றத்திற்கு உட்படக் கூடியவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்.

இன்று அவர்கள் சொல்வது நாளை இருக்காது; பின்னர் அது இன்னும் மோசமாகலாம், ஆனால் தேவன் இன்னும் அப்படியே இருக்கிறார்.

அவருடைய வழங்குதல் இன்னும் எங்களுக்குக் கிடைக்கிறது.

அவர் இன்னும் நமக்கு பலன் அளிக்கும் தேவன்.

உங்களுடைய தேவைகள் சந்திக்கப்படுவது உலக பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல. என்னுடையதன் அடிப்படையிலேயே கொடுக்கிறேன் என்கிறார்.

எனவே என்னை விசுவாசியுங்கள், அதாவது வாழும் தேவனை விசுவாசியுங்கள்!

விசுவாசிகளின் ஐக்கியம்

_____________________

► www.believersfellowship.lk

https://youtube.com/c/BelieversFellowshipLK

https://www.facebook.com/BelieversFellowshipLk/

►  ஜெப விண்ணப்பங்களுக்காக அழைக்கவும்: +94 72 234 0440 / +94 717695195

நீங்கள் வாட்ஸ்அப் மூலம் "தினசரி  வேதாகம பாடங்களை" பெற விரும்பினால், 

Follow the Believers Fellowship English channel on WhatsApp: 

மேலும் இந்த வார்த்தையால் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால், மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்! "இன்று எண்ணப்படும் நாளவும் நாடோறும் ஒருவருக்கொருவர் புத்திச்   சொல்லுங்கள்." எபிரெயர் 3:13.

[#857)]

Read 14 times