+94 722 340440 | 2nd Floor, 28 Galle Rd, Dehiwala South

Believers' Fellowship

Believers' Fellowship

தேவனின் தெய்வீக வல்லமையே இவற்றை நமக்குப் பெற்றுத் தருகிறது. எங்கனம்? தேவனின் அறிவின் மூலமாகும்.

இவைகள் அறிதலின் மூலமும் விசுவாசிப்பதன் மூலமும் மற்றும் வாக்குத்தத்தங்களைக் கொண்டு கிரியைச் செய்வதன் மூலமாகவே கிடைக்கப் பெறுகிறது. அப்பொழுது நீங்கள் கர்த்தரின் தெய்வீக வழங்குதலில் பங்கு பெறுவீர்கள்.

"என் ஜனங்கள் அறிவில்லாமையினால் சங்காரமாகிறார்கள்; நீ அறிவை வெறுத்தாய் ஆகையால் நீ என் ஆசாரியனாயிராதபடிக்கு நானும் உன்னை வெறுத்துவிடுவேன்:" ஓசியா 4:6.

இந்த வசனத்தில் அழிவிற்கான மூலக் காரணத்தை தேவன் வௌிப்படுத்துகிறார்: அறிவின்மையால் என் ஜனங்கள் அழிக்கப்படுகிறார்கள்.

ஒரு நபர் தனக்குள்ள அறிவை விட  வேறு எதையும் அதிகமாக நம்ப முடியாது.

இந்த ஆண்டு பல சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கப் போகிறது.

சவால் என்றவுடனேயே, "அடக் கடவுளே, இன்னுமொரு சவாலா? என்று நமக்கு நினைக்கத் தோன்றும்.  அப்படித் தோன்றக் காரணம்,  நீங்கள் வெற்றியின் மனநிலையில் அல்ல, தோல்வி மனப்பான்மையுடன் இருப்பதினாலாகும். 

சவால் எப்போதும் நல்லது எனத் தோன்றக் காரணம், ""உலகத்தில் உள்ளவரைப் பார்க்கிலும் உங்களில் உள்ளவர் பெரியவர்."  என்பதை நீங்கள் அறிவதனாலாகும். 1 யோவான் 4:4